tamilnadu

img

மத்திய பிரதேச சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 21 முதல் 3 நாள் நடக்கிறது 

போபால்

மத்தியபிரதேச சட்டமன்ற கூட்டத்தொடர் முன்னதாக ஜூலை 20 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மத்திய பிரதேச சட்டமன்றத்தின் மூன்று நாள் அமர்வு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் என்று சட்டமன்ற முதன்மை செயலாளர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச சட்டமன்ற செயலகம் இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அமர்வு முன்னதாக ஜூலை 20 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 24 அன்று நடைபெற்றது.